மாயதுறவி ரஸ்புடின்
ரஷ்யாவின் வரலாற்றில் மறக்க முடியாத பெயர் கிரிகோரி எபீமொவிச் ரஸ்புடின் சைபீரியாவின் மேற்கு பகுதி ஒன்றின் சிறுவிவாசாயி எபீமொவிச்சிர்க்கும் அண்ணாவிற்கும் 1872 ஆம் ஆண்டு பிறந்தவர் ரஸ்புடின் அன்றைய சைபீரியாவில் படிப்பறிவு பெற்றவர்கள் மிக சொற்பமே ஆனால் ரஸ்புடின் தந்தை கொஞ்சம் கல்வியறிவு பெற்றவர் ஆதாலால் இரவு நேரங்களில் தனது குடும்பத்தினருடன் பைபிளினை படிப்பதில் செலவிட்டார். இதன் தாக்கமே ரஸ்புடினை பிற்காலத்தில் புனித மனிதனாகவும் ,ஜார் அரசவையில் கோலோச்சவும் உதவியது.
இளம்
வயது முதலாகவே ரஸ்புடினுக்கு அதிசய சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தனது எட்டாம் வயதில் மூத்த சகோதரனை கபவாதத்தில் இழந்த துயரம் வெகுவாக
ரஸ்புடினை தாக்குகிறது ஆனாலும் அவனுடைய அசாத்திய சக்திகள் மங்கவில்லை, ஒரு
சமயம் ரஸ்புடினின் தந்தையும் அவர் நண்பர்களும் கிராமத்தில் நடந்த குதிரை
திருட்டு குறித்து விவாதித்த போது தன் படுக்கையில் இருந்து துள்ளி
எழுந்த ரஸ்புடின் குறிப்பிட மனிதரை சுட்டி இவர்தான் குதிரயை திருடியது என
கூறியபோது அவனது கூற்றினை ஏற்க்க மறுத்துவிட்டனர்.பிறகு ரஸ்புடின்
உறவினர்கள் இருவர் ரஸ்புடின் சுட்டிய மனிதனை ரகசியமாக கண்காணித்தபோது அவரே
குற்றவாளி என அறிந்து வியந்தனர்.
ரஸ்புடின்
அவனது கிராமத்தில் தனித்தவிதமாகவே வளர்ந்தான், கட்டுபாடற்ற வாழ்க்கை
முறையினை மேற்கொண்டான். மிக இளம்வயதிலேயே அளவுக்கு மிஞ்சி மது அருந்தும்
வழக்கம் கொண்டிருந்த ரஸ்புடின் தன வாழ்க்கையில் எத்தனை தூரம் செல்லமுடியுமோ
அத்தனை தூரம் சென்றவன், மேலும் ரஸ்புடினின் மீது கிராமத்து பெண்களுக்கு
இனம் புரியாத கவர்ச்சி இருந்தது. பெண்கள் மீது அதிக ஆசை கொண்டதன் விளைவாகவே
தன் பத்தொன்பதாம் வயதில் பிரஸ்கோவையா துப்ரோவினா என்ற 23 வயது பெண்ணை
காதலித்து மணம் புரிந்தார்.
ரஸ்புடினுக்கு
தான் மேற்கொள்ள இருக்கும் பயணம் தன வாழ்வின் பாதையை மாற்றப்போவது அறியாமல்
பயணப்படுகிறார். வேர்க்ஹோடுரி(verkhoturie ) பயணத்தில் அங்கே
ரஸ்புடினுக்கு இரண்டு மிக முக்கிய சந்திப்புகள் நிகழ்கின்றன.
ஒன்று
ரஷ்யாவின் புகழ்பெற்ற துறவி மகரி (makary)தனது பயணத்தின் துவக்கத்தில்
முதல் மகனை இழந்த ரஸ்புடினுக்கு மகரி" இது ஒரு வகையில் கடவுளின் முன்
அறிவிப்பாக எடுத்து கொண்டு மீண்டும் கிராமத்திற்கு செல்லும்போது மனிதாக
புனிதனாக செல் " இதனை பின்பற்றும் ரஸ்புடின் மீண்டும் தனது கிராமத்திற்கு
திரும்பி மது மற்றும் இறைச்சி உண்பது போன்ற வழக்கங்களை கைவிட்டு தவறாமல்
பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார், ரஸ்புடினின் இந்த செய்கை மாற்றங்கள் அவரது
நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் ஆச்சர்யத்தையும் மகிழ்வையும்
அளிப்பதாக உள்ளது.
அதே
சமயம் ரஸ்புடின் சந்தித்த இன்னுமொரு மிக வினோதமான ரஷிய மத குழு ஸ்கொப்ட்சி
(skoptsy ) இவர்களின் கொள்கை பாவத்தை செய்வதன் மூலமும் அதற்க்கான
மன்னிப்பை கோருவதன் மூலமும் இறைவனை அடையலாம், மிக எளிதாக கூறுவதென்றால்
கடவுளை அடைய வேண்டுமெனில் கண்டிப்பாக பாவங்கள் செய்ய வேண்டும் எனபது
இவைகளின் வினோத கொள்கை.இந்த மத கொள்கைகள் ரஸ்புடினுக்கு மிக சரியாக
பொருந்தி வந்தது.
தனது
தற்பொழுதைய வாழ்வினை சீர்திருத்தம் செய்திருந்தாலும் முந்தைய வாழ்வு
முழுவதும் பாவங்களை மட்டுமே செய்த ரஸ்புடின் இந்த வினோத மத கொள்கை படி மத
குருவாக புதிய தோற்றம் கொண்ட ரஸ்புடின் வழக்கம் போலவே தனது பாவங்களை
செய்தவாறே மத குருவாக மதம் குறித்து போதிக்க பல்வேறு பகுதிகளுக்கு பயணம்
மேற்கொள்கிறார்.
1902
- ஆம் ஆண்டு மத குருமார்கள் ரஸ்புடினை செயின்ட் பீட்டர்ஸ் பேர்க்
செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர், ரஸ்புடின் மேலும் பல செல்வந்தர்களையும்
உயர்குடும்பத்தினரையும் வசப்படுத்த செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் செல்ல
முடிவெடுத்தார், மேலும் ரஸ்புடின் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் வரும் முன்னரே
அவரை பற்றிய செய்திகள் அங்கே மக்களிடையே புழங்கி வந்தது.ரஸ்புடினின் நோய்
குணபடுத்தும் பிரார்த்தனை மந்திரம் கிறித்துவ மற்றும் பாகன் சமயத்தில்
இருந்த அசாத்திய மற்றும் மயக்கும் பேச்சுத்திறனை மேலும் வளர்த்து கொண்டார்
இந்த திறமைகளை சாவியாக பயன்படுத்தியே அரச குடும்பத்தில் மிக உயர்ந்த
செல்வாக்கினை பெற்றார்.
1903 -இல்
செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் வரும் ரஸ்புடின் தன் பேச்சாலும் போதைனையாலும்
உயர்தர வகுப்பு மக்களை கவர்ந்ததன் மூலம் ரஸ்புடினுக்கு சீடர் குழாம் மேலும்
விரிவடைகிறது , தன்னை ஒரு ஆன்மீக ஞானியாக குறிப்பிட்டு கொண்ட ரஸ்புடின் "
கடும் தவத்திலும் தனிமையிலும் வாழும் கடவுளின் நாயகனாகிய தனக்கு உதவுவது
மூலம் குழப்பத்திலும் துன்பத்திலும் உழலும் ஆன்மாக்களுக்கு உதவுமாறு
"விவரித்து கொள்கிறார்.
ரஸ்புடினின்
அமானுஷ்ய சக்திகளை குறித்து மக்களிடையே பேச்சும் நம்பிக்கையும் பல உயர்தர
மக்களை இணைக்க போதுமானதாக இருந்தது,உயர் வகுப்பு மக்களுக்கு இந்த கடவுளின்
நாயகன் சர்ச்சில் இருப்பது அவசியமானதானது, ஆனாலும் ரஸ்புடினை விரும்பாத
சிலர் அவர் மதத்தை முகமூடியாக கொண்டு அதன் மூலம் மது பெண்கள் சுகம்
மற்றும் பணத்தை தேடுவதாக குற்றம் சாட்டினர்.
1905 -ஆம் ஆண்டு மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் விஜயம் செய்யும் ரஸ்புடின் தனது ஆரம்ப கால நண்பருடன் தங்கி இருக்கும் போது
ரஷ்யாவின்
பிரபு குடும்பத்தினரான பீட்டர் நிக்கொலோவிச் மற்றும் மிளிட்சா
,சந்திக்கிறார் . இறைவனின் அற்புதாமான அருளை பெற்ற அதே சமயம் மிகவும்
வறுமையில் இருக்கும் ஒரு துறவியை சந்திபதான ஏற்பாடாக அது இருந்தது அந்த
தருணத்தில் ரஸ்புடின் தனது வழக்கமான நோயினை குணப்படுத்தும் அற்புதத்தை
நிகழ்த்துகிறார், பிரபுவின் குடும்பத்தினருக்கு இல்லை அவர்களின் செல்ல
நாய்க்கு, மருத்துவர்களால் இரண்டு மாதம் மட்டுமே வாழும் என கூறப்பட்ட
நாயின் அருகில் அமர்ந்து ஏறத்தாழ அரை மணி நேர பிரார்த்தனை செய்து ரஸ்புடின்
எழும்போது நாய் கண்ணால் கண்டு உணரும் அளவு உடல் நிலை தேறி இருந்தது இந்த
நிகழ்வுக்கு பின் அதே நாய் ஏறத்தாழ ஒரு வருடம் உயிர் வாழ்ந்ததுராணிஅலெக்சாண்ட்ரிய |
மருத்துவர் பிலிப் என்பவருடன் ஜார் அரசி அலெக்சாண்ட்ரியா உடன் நாடு மற்றும் கடவுள் போன்றவற்றை குறித்து விவாதிப்பது வழக்கம் அச்சமயம் மருத்துவர் பிலிப் கடவுள் குறித்து விவாதத்தின் பொது ரஸ்புடின் குறித்து கூறுகிறார்.
ரஷிய அரசர் மற்றும் அரசி ரஸ்புடினை 1905 -1906 இந்த வருடங்களில் சொற்ப அளவிலேயே சந்தித்து உள்ளனர், அந்த சந்திப்பின் போது ரஸ்புடின் தனது அமானுஷ்ய சக்திகளை உபயோகபடுத்தாமல் இயல்பான முறையில் அவர்களை எதிர்கொண்டுள்ளார்,
இளவரசர் அலெக்சி |
ஹீமோபீலியா என்பது காயம் ஏற்பட்டால் ரத்தம் வெளிவந்து உறையாமல் தொடர்ந்து வெளியேறும் ஒரு வகை மரபு நோய், மிகவும் நோய் வாய்ப்பட்ட முறையில் இருந்த அலேக்சியை கவனித்து கொள்ளவும் பாதுகாக்கவும் தனி பாதுகாவலர் நியமிக்க பட்டார் இந்த செய்தி மக்களுக்கு தெரியாத வண்ணம் அரசரும் அரசியும் பார்த்து கொண்டனர் அதே சமயம் அலேக்சியின் நோயின் காரணமாக அவரால் இயல்பான வாழ்வை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
அரசியின் ஆலோசகரான பிலிப் ஏற்க்கனவே ரஸ்புடின் குறித்து புகழ்ந்து பேசியதை கேட்ட அரசி ரஸ்புடினை தனது மற்றும் தனது மகன் வாழ்வின் மிக முக்கியமானவராக கருதினார்.அதற்க்கேற்ப்ப பிலிப்பும் ரஸ்புடினை அரசியின் வாழ்வில் ஏற்பட்டா துயர்களை களையும் வண்ணம் அவரிடம் அனுப்புகிறார்.
ரஸ்புடின் அரச குடும்பத்தின் வாரிசை தனது நோய் தீர்க்கும் ஆற்றல் மூலம் ஹீமோபீலியா நோயில் பிடியில் இருந்து விடுவிக்கிறார், இந்த நிகழ்வே அவரை அரச குடும்பத்தில் மிக முக்கிய இடம் பெற காரணமாயிற்று,
ரஷிய அரச குடும்பம் |
இந்த நிகழ்வினை குறித்து அலேக்சியின் மூத்த சகோதரி தனதுகுறிப்புகளில் இவ்வாறு எழுதி உள்ளார் :
"அவனுடைய கண்களுக்கு கீழே கருவளையம்
படர்ந்து இருந்தது மேலும் அவனது சிறிய உடலும் நோயினால் சிதைக்கப்பட்டு
இருந்தது, அவனது கால்கள் வீக்கமாக இருந்தது,மருத்துவர்கள் செய்வதறியாது
தங்களுக்கு பேசிக்கொண்டு இருந்தனர்,என்னை அறைக்கு செல்லுமாறு
வற்ப்புருத்தபட்டேன்,அலிக்கி(alicky )செயின்ட் பீட்டர்ஸ்
பெர்கில் இருந்த ரஸ்புடினுக்கு இந்த செய்தியை அனுப்பினார்.அநேகமாக
நள்ளிரவு அல்லது அதற்க்கு அதற்க்கு பிறகே ரஸ்புடின் அரசமாளிகைக்கு வந்ததாக
தெரிகிறது, பிறகு விடியற்காலை அலிக்கி என்னை அலெக்சி அறைக்கு செல்லுமாறு
கூறியதும் நான் அங்கு சென்ற பார்த்தபொழுது என் விழிகளை என்னால் நம்ப
முடியவில்லை அலெக்சி தற்பொழுது நோயுடன் போராடவில்லை நலமுடன்
காணபட்டான்,அவனது கண்கள் தற்பொழுது பிரகாசமாகவும் அவன் படுக்கையில்
அமர்ந்தும் அதே சமயம் தனது பாதங்களை ஊன்றி எழுந்து நின்று பிரார்த்தனையும்
கூட செய்தான் அவனிடம் நோயின் தாக்கம் இல்லாமல் இருந்தது,பிறகே அளிக்கியிடம்
இருந்து அறிந்து கொண்டேன் ரஸ்புடின் அலேக்சியை தொடக்கூட இல்லை ஆனால்
குணபடுத்தி விட்டார் "
அலேக்சியின் உயிரை காத்த ரஸ்புடினை சார்
மன்னரும் அரசியும் தங்களுடன் இருக்குமாறு வேண்டிகொண்டனர், இதுவரை சாதாரண
விவசாயி போல பணிவுடன் தோற்றம் கொண்டு உலாவந்த ரஸ்புடின், மாளிகைக்கு வந்த
பின் உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டார், கூடவே தன பெண் சீடர்களையும்
அதிகரித்து கொண்டு அவர்களுடன் வலம் வந்தார்.
பலர் முன்னிலையில் பெண் சீடர்களுடன்
சிற்றின்ப விளையாட்டுக்களில் ஈடுபட்ட ரஸ்புடின் அவர்களை ஒருவரை
தேர்ந்தெடுத்து தனியே அழைத்து சென்று கூறுவது "நான் உன்னை அசுத்தபடுத்துவதாக நீ நினைக்கலாம் ஆனால் உண்மை என்னவெனில் நான் உன்னை புனிதபடுத்துகிறேன் என்பதே" ரஸ்புடின் சீடர்கள் இதனை புனிதமாக கருதினர்(the holy of hoiness)
ரஸ்புடின் தன் சீடர்களுடன் |
இளவரசி ஒல்கா(olga )விஷயத்தில் ரஸ்புடின் அதிக இடம் எடுத்து கொள்வதாகவும் பின்னிரவு நேரங்களிலும் கூட ரஸ்புடினை அறையில் கண்டதாக ஒல்காவின் ஆசிரியை ரஷிய அரசி அலெக்சாண்ட்ரியாவிடம் கூறியபோது அலெக்சாண்ட்ரிய ரஸ்புடினை பாதுகாக்கும் விதமாக பேசியதன் மூலம் அலெக்சாண்ட்ரிய மேல் இருந்த ரஸ்புடின் பிடியை அறிய முடிந்தது.
1911 - ஆம் ஆண்டுகளில் ரஸ்புடின்
மீதான குற்றாசாட்டுகள் பெருமளவில் வெளியே கசிய தொடங்கியது முதன் முதலில்
ரஸ்புடினை சந்தித்த பிரபு நிக்கொலோவிச் மற்றும் அவர் மனைவி ரஸ்புடினை பற்றி
இந்த காலகட்டத்தில் கூறியது "மீண்டும் ஒருபோதும் அந்த தீய சக்தியை சந்திக்க விரும்பவில்லை" என கூறினார் .
ரஷிய ஆர்த்தடக்ஸ் சர்ச்சே முதன்
முதலில் ரஸ்புடின் மீதான அதிகாரபூர்வ குற்ற விசாரணையை துவங்கியது,
அவர்களுக்கு கணக்கற்ற ஆதாரங்கள் கிடைத்தன பாதிக்கப்பட்ட பெண்களின்
வாக்குமூலம் போன்றவற்றை சேகரித்து அரசி அலெக்சாண்ட்ரியாவிடம் சமர்பித்து
ரஸ்புடின் குறித்தும் ரஸ்புடினை நம்ப வேண்டாம் எனவும் கேட்டு கொள்கின்றனர்
அனால் அலெக்சாண்ட்ரியா இதனை எதையும் ஏற்க்க தயாராக இல்லை, அனைத்தையும்
புறந்தள்ளினார், இந்த நிகழ்வுகள் மூலம் ரஸ்புடினுக்கும் அரசிக்கும்
இடையே இருந்த உறவை தெளிவாக்கியது.
துறவி இலியோடர் |
ரஸ்புடினின் நண்பர் என
குறிக்கப்படும் மற்றுமொரு துறவி இலியோடர் (iliodar) ரஸ்புடினின் வரம்பு
கடந்த செயல்களை அறிந்து அவரை இந்த பாதையை விட்டு விலகுமாறும் மேலும்
ரஸ்புடின் ஒரு பெண் துறவியிடம் தவறாக நடந்து கொண்டதை அறிந்து வெகுண்டு
அவரிடம் பெண்களை விட்டும் அரச குடும்பத்தை விட்டும் விலகி செல்லுமாறும்
சத்தியம் வாங்கியதாகவும் அதனை சரியாக ரஸ்புடின் நிறைவேற்ற வில்லை எனவும்
கூறப்படுகிறது.
ரஸ்புடின் குறித்த எந்த
குற்றத்தையும் செவிமடுக்க ஜார் அரசரும் அரசியும் தயாராக இல்லை காரணம்
ரஸ்புடினை அவர்கள் துறவியாக நேசித்தனர். அரசி அலெக்சாண்ட்ரியா ரஸ்புடின்
குறித்த குற்றசாட்டுகளுக்கு கூறிய பதில் "ரஸ்புடினை அவர்கள் வெறுக்க காரணம் நாங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதால்" என கூறினார்.
1915- முதலாம் உலகப்போரில் கிழக்கு
முன்னணியில் இருக்கும் படையின் அதிகாரத்தை ஜார் மன்னர் எடுத்து கொள்வதாக
உத்தேசித்திருந்தார். வெளிப்படையாக இந்த முடிவின் பின்னணியில் இருந்தது
ரஸ்புடின் என கூறப்படுகிறது. ஜார் மன்னரை அப்புறப்படுத்தி பிறகு ஜார்
அரசியின் மூலம் ரசியாவை ஆளலாம் என்ற ஒரு எண்ணம் எனவும் அதக்கேற்றார் போலவே
ஜார் அரசி ரசுபுடின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு செயலாற்றினார்.
ரஸ்புடின் அரசவையில் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒரு தனிமனிதாக விளங்கினார்
எதிர்ப்பவர்களை காணமல் போகசெய்வும் விரும்புவர்களை உயர்த்தும் அளவுக்கு
அரசு மற்றும் அரசவையில் அவர் செல்வாக்கு இருந்தது.
உயர்ந்த ரஸ்புடினின் செல்வாக்கு சிலருக்கு எரிச்சலை தந்தது, அதே சமயம்
இளவரசர் யுசுபோவ் |
ரஸ் புடினின் பிடியில்
இருக்கும் அரசியரையும் அரச குடும்பத்தையும் காப்பாற்ற சிலர் ரஸ்புடினை
கொன்றொழிக்க திட்டமிட்டனர். அந்த நாளும் வந்தது. டிசெம்பர் மாதம் 16 தேதி
1916 ஆண்டு இளவரசர் யுசுபோவ் தனது இல்லத்தில் நடைபெறும் விருந்திற்கு
ரஸ்புடினை அழைத்திருந்தார்.அது விருந்து போல தோற்றமிருந்தாலும் உண்மையில்
அங்கே அனைவரும் காத்திருந்தது ரஸ்புடின் மரணத்தை காண. இளவரசர் யுசுபோவும்
ஏனைய சதி ஆலோசகர்களும் ரஸ்புடினை கொள்வது ஒன்றே அனைத்திற்குமான தீர்வு
என்றும் ரச்புடினுக்கு உணவில் விஷம் கலந்து கொடுப்பது என்றும் திட்டமிட்டு
இருந்தனர்.
திட்டப்படியே
விஷம் கலந்த கேக்குகளை இளவரசர் யுசுப்போவ் ரஸ்புடினுக்கு பரிமாறினார் ஆனால்
அந்த விஷம் ரஸ்புடினை ஒன்றும் செய்யவில்லை, போதாக்குறைக்கு மீண்டும்
மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்தனர் விஷத்தின் பாதிப்புகள் எதுவும்
தெரியவில்லை, ரஸ்புடினை விஷம் பாதிக்கவில்லை, நேரம் நேரம் செல்ல செல்ல
எரிச்சலைடந்த யுசுபோவ் ரஸ்புடினை சுடுவதன் மூலம் கொள்ளலாம் என முடிவு
செய்து ரச்புடினின் பின்புறத்தில் இருந்து சுடுகிறார். ரஸ்புடின் கீழே
கிடக்கிறார் இளவரசர் யுசுபோவ் ரச்புடினின் பிணத்தருகே சென்று குனிந்து
காணும் போது எவரும் எதிர்பாரா சட்டென துள்ளி எழும் ரஸ்புடின் தன கால்களால்
யுசுபோவை தாக்குகிறார்.சுதாரித்த யூசுபோவ் ரஸ்புடினிடமிருந்து தப்பி
மாடிப்படிகளில் ஓடுகிறார் , அப்பொழுது ரஸ்புடினை நோக்கி நான்கு முறை
யூசுபோவ் சுடுகிறார் இதில் இரண்டு குண்டுகள் தவறினாலும் இரண்டு தோளிலும்
தலையிலும் காயமுண்டாக்குகிறது ரஸ்புடினால் எழ முடியவில்லை எனினும்
ரஸ்புடின் சாகவில்லை பற்களை கடித்து கொண்டு இருக்கிறார் , தனது
குழுவினருடன் இணைந்து யூசுபோவ் ரத்தம் வருவரை கொடுராமான முறையில்
தாக்கியும் ரஸ்புடின் இறக்கவில்லை, ரச்புடினி கை கால்களை கட்டி கனமான
போர்வையில் சுற்றி அதிகாலை நேரத்தில் சதி ஆலோசகர்கள் அவரது உடலை ஆற்றில்
வீசி சென்றுவிட்டனர்.ரஸ்புடின் வீடுதிரும்பாமை அவரது உறவினர்களுக்கு
அச்சத்தை ஏற்படுத்துகிறது மேலும் போயல்சாரின் விசாரணையில் டிசெம்பர் மாதம்
19 தேதி நிவேதா ஆற்றின் உறை பணியில் ரஸ்புடின் உடல் கண்டெடுக்க படுகிறது.
ரஸ்புடினி பிரேத பரிசோதனை தரும் ஆச்சர்ய மிக்க முடிவுகள் சில
- மதுவில் விஷம் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை
- மூன்று குண்டுகள் உடலில் கண்டெடுக்கப்பட்டது முதலாம் குண்டு வயிற்றுபகுதியையும் கல்லீரலும் தாக்கப்பட்டது, இரண்டாம் குண்டு சிறுநீரக பகுதியை தாக்கி இருந்தது, மூன்றாம் குண்டு மூளை பகுதியில் காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
- அவரது நூரையிரல் பகுதியில் நீர் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.(இதன் மூலம் ரஸ்புடின் நீரில் மூழ்கியும் உயிருடன் இருந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர்)
தீர்க்க தரிசன கடிதம்
No comments:
Post a Comment