Thursday, January 31, 2013

What Is Karma?



The Law of Karma
by Paramhansa Yogananda
From: Karma and Reincarnation
Article Index


What Is Karma?
If we accept the principle of cause and effect in Nature, and of action and reaction in physics, how can we not believe that this natural law extends also to human beings? Once consciousness is understood as basic to everything the question begs to be asked: Do not humans, too, belong to the natural order?
Such is the law of karma: As you sow, so shall you reap.* If you sow evil, you will reap evil in the form of suffering. And if you sow goodness, you will reap goodness in the form of inner joy.
To understand karma, you must realize that thoughts are things. The very universe, in the final analysis, is composed not of matter but of consciousness. Matter responds, far more than most people realize, to the power of thought. For will power directs energy, and energy in turn acts upon matter. Matter, indeed, is energy.
Every action, every thought, reaps its own corresponding rewards.
Human suffering is not a sign of God's, or Nature's, anger with mankind. It is a sign, rather, of man's ignorance of the divine law.
The law is forever infallible in its workings.

The Soul Is Free
Souls are "made" in the image of God. Even the greatest of all sinners cannot be damned forever. A finite cause cannot have an infinite effect. Due to the misuse of his free will, a person might imagine himself to be evil, but within he is a son of God. A king's son might, under the influence of liquor or of a bad dream, think himself poor, but as soon as he recovers from his state of intoxication, or as soon as he awakens, he forgets that delusion. The perfect soul, ever sinless, eventually wakes up in God when it remembers its real, eternally good, nature.
Man, being made in the image of God, is deluded only temporarily. This temporary delusion leads him to think of himself as mortal. So long as he identifies with mortality he must suffer.
A soul's delusion of mortality may extend to many incarnations. Through self-effort, however, always influenced by the law of God, the Prodigal Son develops discrimination, remembers his home in God, and attains wisdom. With illumination the prodigal soul remembers its eternal image of God, and is reunited with cosmic consciousness. His Father then serves him "the fatted calf" of eternal bliss and wisdom, liberating him forever.

Delusion is Temporary
Man may misuse his free will for a time, considering himself mortal, but that temporary delusion can never erase from within him the mark of immortality and God's image of perfection. A baby's premature death cannot possibly have permitted him the use of free will to be either virtuous or vicious. Nature must bring that soul back to earth to give it a chance to use its free will to work out also the past karma which caused it to die so young, and to perform the good actions that lead to liberation.
If an immortal soul has not worked out in one lifetime of school those delusions which bind him, he needs more lifetimes of schooling to bring him the understanding of his innate immortality. Only then can he return to the state of cosmic consciousness. Ordinary souls therefore reincarnate, compelled by their earth-bound desires. Great souls, on the other hand, come on earth only partly to work out their karma, but principally to act as noble sons of God to show lost children the way to their heavenly Father's home.

Attracting a Bodily Home
When good parents unite in physical union, they produce a pure astral light as the positive and negative currents at the base of their spines and in their sex organs, unite. This light is a signal to good souls with compatible vibrations in the astral world to be physically conceived in the union of the sperm and ovum cells. When the soul enters, the embryo is formed, and the body is gradually made ready to be born. Souls with bad karma have to enter into the body of evil mothers. When evil parents come into physical union, they form a dim, impure light at the base of the spine, signaling an invitation to souls with evil karma.
Like attracts like. Souls with evil karma are born into evil families; souls with good karma are born into good families. Evil families and good families attract souls according to the magnetism of their inner likings. That is, evil families attract souls with bad karma. Good families attract good souls. The attraction is based on mutual likes and dislikes. Evil entities have an affinity for evil families, whereas the affinity of good souls is for good families.
People with more opportunity in life, owing to their good karma, should help those with lesser opportunity, otherwise they'll develop bad karma. Selfishness is spiritually degrading and ultimately makes one unfortunate. God is not a divine autocrat passing judgment on people for their actions. The judgments of cosmic law are based on karmic cause and effect, and are just.
The divine law of harmony creates a natural equilibrium. When any soul acts against this equilibrium, he hurts himself. For example, if you dip your hand in cool water you enjoy a soothing sensation, but if you approach fire, the very heat of it warns you that your hand may get burnt. The fire has no will to give you pain, nor does cool water produce a pleasant sensation out of choice. The responsibility for getting burnt by fire is his who puts his hand into it. And the responsibility for feeling pleasure from cool water is, again, his who inserts his hand into the water. Fire and water, heat and coolness, are part of the overall state of the universe with which our duty is to live in harmony.

We Punish Ourselves
By wrong living one can create a physical and mental hell even worse than the fiery hell that vengeful people imagine for others after death. By good living one can create within himself a place even sweeter than the heaven people imagine for themselves in the after-death state.
Man, influenced by delusion, ascribes to the all-loving God a vindictive spirit that creates hells and purgatories. God, in his infinite love, is calling the soul continuously to come back to His eternal kingdom of Bliss. But souls, when they misuse their God-given independence, wander away from God and wallow in the mire of suffering, punishing themselves by the effects of their own errors.
The idea of an eternal heaven is true, though most people's ideas of heaven are very limited. We are made in the image of God and, at the end of the long trail of incarnations, our wandering actuated by material desires, we will find the blissful heavenly Father waiting to receive us, His prodigal children, and to entertain us with everlasting, ever-new joy. But the idea of eternal damnation for souls made in the image of God is untenable and should be exploded and banished as a superstition from the minds of men.

Good Karma
This life is like a movie, and just like in an exciting movie, there has to be a villain so we will learn to love the hero. If you imitate the villain's behavior, however, you will receive his punishment. It's all a dream, but ask yourselves, Why live a bad dream by creating bad karma? With good karma, you get to enjoy the dream. Good karma also makes you want, in time, to wake up from the dream. Bad karma, on the other hand, darkens the mind and keeps it bound to the dreaming process.
From a mountaintop, one sees clearly the whole countryside, and also the open sky above. From the heights it is natural to want to soar even higher, far above the earth. In the fog-bound valley below, however, the most that one aspires to may be only to climb a little bit higher.

Evil Karma and "Hell-fire"
The Heavenly Father could not possibly send his human children to hell forever for making mistakes during their brief sojourn on earth. When they misuse their God-given independence, they must suffer the material consequences of their own evil actions, and reward themselves through their own good karma or virtuous deeds.
Those humans who act wrongly create evil tendencies, which remain hidden in the brain ready to pour out fiery suffering at a suitable time. These hidden, misery-making tendencies"or hell-fires"are carried into the astral world at death by a soul with bad karma. Souls in the after-death state have no physical sensations and could not be burned by physical fire. But souls with bad karma can suffer mental agonies worse than fiery burns.
The word "hell" is from the Anglo-Saxon root "helan, to conceal." The Greek root is "helios, sun or fire." Therefore, the word "hell-fire" is very appropriate to depict the concealed fire of agony that stored-up tendencies can produce in one's earthly life or in the astral world. Just as a murderer burns with evil conscience during wakefulness and with subconscious terror during sleep, so he suffers from fiery evils in the sleep state of death.
A benign father could never eternally burn a soul made in His own image for its temporary mistakes on earth. The idea of eternal punishment is illogical. A soul is forever made in the image of God. Even a million years of sin could not change its essential, divine character. Man's unforgiving wrath against the evil actions of his brethren has created this misconception of eternal hell-fire.

My Experience with an Orthodox Believer in Hell-fire
Once I met an old man who lived near Seattle. I had been sitting near the sea, much inspired by the vastness of divinity. After that inspiration subsided I felt hungry, and went to the farmhouse of this man, seeking to buy some cherries. The rosy-cheeked man looked very happy, and showed me kind hospitality. A divine impulse then came over me, and I said to him, "Friend, you look happy, but there is a hidden suffering in your life." He asked, "Are you a fortune-teller?" I answered, "No, but I tell people how to improve their fortunes."
He then said, "We are all sinners, and the Lord will burn our souls in hell-fire and brimstone."
I replied, "How could a man, losing his body at death and becoming an invisible soul, be burned by fire created by material brimstones?" He surprised me by repeating angrily, "We will certainly burn in hell-fire." I said, "Did you get a telegram about this from God, that He will burn us in hellfire?" At this the old man became even more agitated.
To mollify him, I changed the subject and said, "What about your unhappiness over your wicked son?" He was surprised at my words and acknowledged that he was helpless to correct his son, whom he deemed incorrigible. This sorrow remained as a burning fire at the back of his mind. I said, "I have a remedy that will absolutely cure this situation." The old man's eyes gleamed with joy as he smiled. I, then, with a mysterious attitude as if about to reveal the grand solution, whispered to him, "Have you got a very big oven with a broiler?"
"Why, yes," he said. Then, suspiciously he asked, "Just what are you getting at?"
"Don't worry," I said reassuringly. "What I'm proposing will end all your sorrows."
Somewhat mollified, he said, "Go on."
"Now then," I continued, "Heat that oven, with the broiler, to red-hot temperature. Do you have some strong rope and two trusted friends who would not repeat anything against you?" Again he said, "Why, yes." Then I said, "Call your son here. With the help of your friends, bind him hand and foot, and slip him into the red-hot oven."
The old man was furious! Shaking his fist at me, he shouted, "You blackguard! Who ever heard of a father burning his son, no matter how wicked?"
I then spoke soothingly, "That is exactly what I wanted to tell you. Where did you, who are human, get this instinct of love except from the Divine Father? Even a human father cannot stand the cruel thought of roasting his own son alive to put him, or himself, out of misery. How could you think the Divine Father, who has infinitely greater love than you, and who created parental love, would burn His own children with hell-fire and brimstone?"
The old man's eyes filled with tears of repentance as he said, "I understand now that the Heavenly Father is a God of love!"
We punish ourselves by our own evil actions, and reward ourselves by our own good deeds.
Sin cannot change the soul. We, who are made in the image of God, can be lost in the jungles of an evil environment for a while, but no amount of sin can change our eternal, divine nature. Sin is a crust which hides the perfect soul, made eternally in the image of God. When that crust is dissolved by meditation, the perfection of the soul is revealed at last.

God Wants to Help Us
When God sees that a soul, by the misuse of free will and bad company, has lost itself in the forest of egotism, He becomes very concerned for him, and sends him spiritual aid to bring him back into His fold of divine, virtuous living. He helps souls to reincarnate in places where they can work out their karmas and liberate their souls by meditation and wisdom. All souls on earth belong to the fold of God; the Invisible Shepherd ever looks after them.

* "Be not deceived; God is not mocked: for whatsoever a man soweth, that shall he also reap." (Galatians 6:7)

Thursday, January 10, 2013

மந்திரம்

இந்து மதத்தில் இறைவன் "வேதமந்த்ர சொரூப நமோ நமோ" என துதிக்கப்படுகிறார்.மந்திரங்களைப் பற்றிய குறிப்புகள் வேதங்களில் விரவிக்கிடந்தாலும் இப் பதிவில் தமிழ் கூறும் நல்லுலகில் மந்திரம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதையே முதன்மையாக வைத்து எழுத விரும்புகிறேன்.ஏனெனில், இன்றுள்ள சூழலில் மந்திரங்கள் சொல்பவருக்கும் இறைவனுக்கும் மட்டுமே புரிய நாம் தேமேவென பேந்த பேந்த விழித்துக் கொண்டிருபதுதான் நிதர்சனம்.


தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

என்று சமத்துவத்தைச் சொன்ன தமிழில் மந்திரங்கள் மறைபொருளாக இருந்திருக்க வாய்ப்பில்லை, காலப்போக்கில் அவை மறைக்கப்பட்டதாகவே கருதலாம்."ஊனுடம் பாலயம் உள்ளம் பெருங்கோவில்" என இறைவனை தங்கள் உடலில் கண்ட் சித்தர்கள் கூட இம்மந்திர உச்சாடனங்களை தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.

மேலும் விவாதிப்பதற்கு முன், மந்திரமொழி பற்றியும் அதன் அடிப்படைகளையும் தெரிந்து கொள்வோம்.ஒரு எழுத்து உருவாக்கும் ஒலியானது நமது உடலின் எந்த இடங்களின் முய்ற்சியால் உருவாகிறது என்பதை இதுவரை யாராவது கவனித்திருக்கிறீர்களா?, கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள் ஆச்சரியமான விடயங்களை உணரமுடியும்.

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் இந்த ஒலிமூலங்கள் நமது உடலில் எங்கு மையம் கொண்டுள்ளது என உணர்ந்து அதை தூண்டும் வகையிலான ஒலிக் குறிப்புகளை உருவாக்கியிருந்தனர்.இந்த சொற்களுக்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இவற்றை 'பீஜங்கள்'என்றும், உடலில் ஒலி தோண்றும் இடங்களை 'தானங்கள்' என்றும் கூறுகிறார்கள்

மந்திரங்களின் பொருள் எனப்பார்த்தால், மொழிப்பொருள் மற்றும் ஒலிப்பொருள் என இருவகையாக கொள்ளலாம்.ஒலிப்பொருள்தான் நுட்பமானது. மந்திரங்களை உச்சரிக்கும் முறையை மூன்று வகையாக முறையே, வாயினால் சப்தமாய் உச்சரிப்பதை'வைகரி'என்றும், உதட்டால் உச்சரிப்பதை 'உபான்ஸு' என்றும் மனதால் உச்சரிப்பதை 'மானசீகம்' என்றும் சொல்கிறார்கள்.இதில் மானசீக முறையே அதிக பலனைத் தருமென்ற கருத்தும் உள்ளது.

மானசீகமாய் உச்சரிக்கும்போது மந்திரங்கள், உள்மனதில் ஊடுருவி, உடலெங்கும் பரவி பின் உடலைத்தாண்டி பிரபஞ்சத்தில் அதிர்வுகளை உருவாக்கி உள்மனத்தையும் பிரபஞ்சத்தையும் இனைக்கும் அனுபவத்தை சொல்லித் தெரிவதைவிட உணர்வதே சிறப்பாயிருக்கும். இம்மந்திர அதிர்வுகள் நொடிக்கும் நாலு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பரவுவதாயும் ஒரு குறிப்பு காணக்கிடைக்கிறது.

'தேவபாஷை' எனக் கூறப்படும் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரங்களுக்குத்தான் வலிமை உண்டு எனக்கூறப்படுவதை மறைமலையடிகள் தனது 'சிவஞானபோத ஆராய்ச்சி' என்கிற நூலில்(பக்கம் 112) தக்க ஆதாரங்களுடன் நிராகரித்திருக்கிறார். மந்திரம் என்பது தமிழ்வார்த்தை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தொல்காப்பியம் முதல் பழந் தமிழ் நூல்களில் இந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.மந்திரத்தை மனதின் திறம் என பொருள் கொள்ளலாம்.மனதை உறுதி செய்ய மந்திரம் பயனாகிறது என்பதுதான் மந்திரத்தின் ஆகக்கூடிய பலன் என நான் கருதுகிறேன்.

நமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.மாறாக 'பதஞ்சலி யோக சூத்திரம்'என்கிற நூலில் மந்திரத்தின் பொருள் தெரியாமல் எத்தனை முறை உச்சரித்தாலும் பயனில்லை என கூறுகிறது.


மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.இந்த நம்பிக்கையே வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

இந்த பீஜங்கள் மற்றும் தானங்களை ஒரு சரியான குருவே உணர்த்தமுடியும்.சித்தர் மரபில் குருவின் மகத்துவம் உயர்வாக கூறப்படுகிறது. திருமூலர் கூட சிவனை வழிபடுவதால் பயனில்லை, சிவனை காட்டும் குருவை வழிபட்டாலே போதுமென கூறுகிறார்.'வெளியே உள்ள குரு நமக்கு உள்ளே உறையும் குருவை காட்டுகிறான்" என்பது சித்தர்களின் தத்துவம்.

தமிழகத்தை பொறுத்த வரையில் 'ஓம்' என்கிற ஓரெழுத்து மந்திரமும். 'சிவாயநம' என்கிற ஐந்தெழுத்து மந்திரமும், 'சரவணபவ' என்கிற ஆறெழுத்து மந்திரமும், வைணவத்தில் 'ஓம் நமோ நாராயணய' என்கிற எட்டெழுத்து மந்திரம்தான் அனைவரும் அறிந்தது.இதைத் தாண்டி எண்ணற்ற மந்திர உச்சாடணங்கள் உள்ளது.

 இனி இந்தப் பதிவினில் ஒலி சார்ந்த மந்திரங்கள் சிலவற்றை தருகிறேன்.இவற்றை நான் பரிட்சித்துப் பார்த்ததில்லை,பார்க்கும் பொருமையும் இல்லை.படிக்கும் அன்பர்கள் யாருக்கேனும் இதனால் பயனேதும் விளையும் பட்சத்தில் அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சியாயிருக்கும்.தமிழில் மந்திரங்கள் பெரும்பாலும் சிவன்,சக்தி,சும்ரமணியர்,விஷ்னு இவர்களைச் சார்ந்ததாகவே காணக்கிடைக்கிறது.

இங்கே சிவனைச் சாந்த மந்திரங்களை பார்ப்போம்.சிவனுக்கு ஐந்து முகங்கள் அவையாவன,நான்கு திசைகளுக்கொரு முகம்,ஐந்தாவது முகம் ஆகாயத்தை நோக்கியது.கிழக்கில்'தத்புருஷம்',தெற்கில்'அகோரம்', வடக்கில் 'வாமதேவம்',
மேற்கில்'சித்தியோசம்', உச்சியில்'ஈசானம்'.கருவூரார் எனப்படும் கருவூர் சித்தர் இந்த ஒவ்வொரு முகத்திற்குமான பல மந்திரங்களை அருளியுள்ளார்.

பொதுவில் மந்திரங்களை கைளாளும் முறையாவது, அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும், குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.முதலில் குறைந்தது 108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

அதன் பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதினை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை உச்சரிக்கலாமென்கிறார்கள். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உயயோகிக்கலாம்.இவ்வாறு தொடர்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம். இனி மந்திரங்கள்....

தத்புருஷ மந்திரம்
இதன் மூல மந்திரம் 'நமசிவாய' இதை விடாது உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும். தத்புருஷத்தில் கருவூரார் 25 மந்திரங்களைச் சொல்கிறார், பதிவின் நீளம் கருதி ஐந்தினை தருகிறேன்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகுமாம்.
"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.


அகோர மந்திரம்
இதன் மூல மந்திரம் "நமசிவ",

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்


வாமதேவ மந்திரம்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.


சத்யோசாத மந்திரங்கள்


"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்


ஈசான மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

இ-மெயில் தமிழன்!

இ-மெயில் தமிழன்!








இ-மெயில் தமிழன்!

இமெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்...
இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் 
என்று.
தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை. இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில்.
'டைம்’ பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்’ என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, 'வாஷிங்டன் போஸ்ட்’, 'நியூயார்க் டைம்ஸ்’ எனப் பிரபல மீடியாக்கள் 'இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்தி பெற்றதும், மிகப் பெரியதுமான அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆவணக் காப்பகம் (Smithsonian museum), ''மின்சார விளக்கு, செயற்கை இதயம் போன்ற மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் வரிசையில் இமெயிலையும் மதிப்பிட வேண்டும்!'' என்று வர்ணிக்கிறது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் விஷ§வலைசேஷன் (Systems Visualization) மற்றும் கம்பேரடிவ் மீடியா ஸ்டடீஸ் (Comparative Media Studies) ஆகிய இரு துறைகளில் பேராசிரியராக இருக்கும் சிவா அய்யாதுரை, நோம் சாம்ஸ்கி தலைமையில், இந்தியாவின் சாதிய அடுக்குநிலை தொடர்பாக ஆய்வுசெய்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் ஏழு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திவருபவர். (அதில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்... அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை).
ஓர் அதிகாலை நேரத்தில் சிவா அய்யாதுரையுடன் நடத்திய மிக நீண்ட 'ஸ்கைப்’ உரையாடல் ஆச்சர்யங்களால் நிரம்பியது. ''ஹாய் பாரதி... வணக்கம்'' என்று அன்புத் தமிழுடன் வந்து அமர்கிற சிவா அய்யாதுரைக்கு 48 வயது.
''நீங்கள் யார்? இத்தனை நாளும் எங்கு இருந்தீர்கள்?'' 
''ஹா... ஹா... என் அப்பா அய்யாதுரைக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர். அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பரமன்குறிச்சி. இருவரும் அந்தக் காலத்திலேயே நன்றாகப் படித்தவர்கள். ஆறு வயதுக்குள்ளாகவே எனக்குப் படிப்பின் மீது மிகப் பெரிய ஆர்வம் உண்டாகியது. மும்பையில் வசித்த எங்கள் குடும்பம், என்னை மேற்கொண்டு நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. இந்தியாவில் கோடை காலத்தில் பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதைப் போன்ற... ஒரு சம்மர் கிளாஸில் 'ஃபோர்ட்ரான் 4’ ­(FORTRAN IV) என்ற புரொகிராமிங் மொழியைக் கற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு பள்ளிப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வந்ததால், பள்ளியைவிட்டு நிற்கப்போவதாக அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா 'யுனிவர்சிட்டி ஆஃப் மெடிசின் அண்ட் டென்டிஸ்ரி’யில் (University of Medicine and Dentistry of New Jersey) டேட்டா சிஸ்டம் அனலிஸ்ட்டாகப் பணிபுரிந்துகொண்டு இருந்தார். தன்னுடன் பணிபுரிந்த பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனிடம் என்னை அழைத்துச் சென்றார். மைக்கேல்சன், அப்போது அந்த மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகளைக் கணினி வழியாக ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் முயற்சி யில் இருந்தார். அவர் என்னைத் தன் ஆராய்ச்சி உதவியாளர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டார். சவால் நிறைந்த அந்தப் பணி என் மனதுக்குப் பிடித்திருந்தது.
அப்போது அந்த மருத்துவ மனையில் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக 'மெமோரண்டம்’ எழுதுவார்கள். நோயாளிபற்றிய விவரம், மருத்துவர்பற்றிய விவரம், டூ, ஃப்ரம், சப்ஜெக்ட் எல்லாம் எழுதப்பட்ட அந்த மெமோ ரண்டத்தை அங்கு இருக்கும் தபால் பெட்டி மூலம் மருத்துவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். இதை அப்படியே மின்மயப்படுத்த வேண்டும். அந்த மெமோரண்டத்தை மருத்துவமனையில் உள்ள எந்த ஒரு கணினியில் இருந் தும், மற்றொரு கணினிக்கு எலெக்ட்ரானிக் வடிவத் தில் அனுப்ப முடிய வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம்.
இந்த ஆராய்ச்சியில் நான் உருவாக்கியதுதான் இமெயில் சிஸ்டம். 'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் 50 ஆயிரம் வரிகள்கொண்ட அந்த புரொகிராமை எழுதியபோது எனக்கு வயது 14. அது 1978-ம் ஆண்டு. அதற்கு இமெயில் (email) என்று பெயரிட்டேன். எலெக்ட்ரோ மெயில் என்பதன் சுருக்கம் அது. 'ஃபோர்ட்ரான் 4’ மொழியில் ஒரு புரொகிராமில் அதிகபட்சம் 5 எழுத்துருக்கள்தான் பயன் படுத்த முடியும் என்பதாலும், இமெயில் என்ற சொல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்ததாலும் அந்தப் பெயரை வைத்தேன். அகராதியில் அதற்கு முன்பு இமெயில் என்ற வார்த்தையே கிடையாது!''
''ஆனால், டேவிட் க்ராக்கர், ரே டாமில்சன் ஆகியோர் பெயர்கள்தான் இமெயில் கண்டுபிடித்தவர்கள்பற்றிய ஆய்வுகளில் பேசப்படுகின்றனவே?'' 
''அதெல்லாம் அப்போது. நான்தான் இ மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, இந்த சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 1978-ம் ஆண்டு உலகின் முதல் இமெயிலை எனது வழிகாட்டியான பேராசிரியர் லெஸ் மைக்கேல்சனுக்கு அனுப்பினேன். அது ஒரு டெஸ்ட் மெயில். அதன் ஒரிஜினல் புரொகிராமிங் கோடு, இப்போதும் ஸ்மித் சோனியன் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் நோம் சாம்ஸ்கி என் ஆய்வுகளின் நேரடிச் சாட்சியாக இருக்கிறார்.
டேவிட் க்ராக்கர் கண்டுபிடித்தது 'டெக்ஸ்ட் மெசேஜ்’ அனுப்பும் தொழில்நுட்பத்தை. ஒரு செல்போனில் இருந்து இன்னொரு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறோம் இல்லையா? அதைப் போல அவர் வெறுமனே டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக்கொள்வதைக் கண்டறிந்தார். அதை இமெயில் என்று சொல்ல முடியாது. அதோடு ஒப்பிடுவதானால், நாம் தந்தி அனுப்புவதைத்தான் இமெயில் என்று அழைக்க வேண்டியிருக்கும். மாறாக, இமெயில் என்பது ஒரு முழுமையான சிஸ்டம். இன்று நாம் பயன்படுத்தும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், டிராஃப்ட்ஸ், டு, ஃப்ரம், சப்ஜெக்ட், டேட், பாடி, சிசி, பிசிசி, கம்போஸ், அட்டாச்மென்ட்ஸ், க்ரூப்ஸ், உள்ளிட்ட 86 வகையான இ மெயில் புரொகிராம்களை எழுதி, வடிவமைத்தது நான்தான். இதுதான் முழுமையான இமெயில் சிஸ்டம். ரே டாமில்சன் இமெயிலில் இன்று பயன்படுத்தும் '@’ குறியீட்டைக் கண்டுபிடித்தார். அதற்கு மேல் அவரது பங்களிப்பு இதில் எதுவும் இல்லை.''
''ஆனால், இமெயிலைக் கண்டறிந்தவர் நீங்கள்தான் என்பது ஏன் பெரிய அளவுக்கு வெளியே தெரியவில்லை?'' 
''அமெரிக்காவில் பலருக்குத் தெரியும். ஒருவேளை தமிழ்நாட்டுக்குத் தெரியாமல் இருக்கலாம். 1981-ம் ஆண்டு அமெரிக்க அரசிடம் இருந்து பெற்ற இமெயிலுக்கான 'காப்பிரைட்ஸ்’ இன்றும் என்னிடம்தான் இருக்கிறது. இங்கு கண்டுபிடிப்பு என்பது வேலையின் ஒரு பகுதி. ஆனால், எனது கண்டுபிடிப்பை இவர்கள் ஒப்புக்கொள்ளாமல் சர்ச்சை ஏற்படுத்தக் காரணம், புலம் பெயர்ந்த; கறுப்பு நிறத் தோல் உடைய; 14 வயதுச் சிறுவன் ஒருவன்... இமெயிலைக் கண்டுபிடித்தான் என்பதை இவர்கள் நம்ப மறுப்பது தான். 50 ஆயிரம் வரிகளைக்கொண்ட ஒரிஜினல் புரொகிராமிங் கோட் வெள்ளைத் தோல் உடைய ஒருவரிடம் இருந்தால், இந்தச் சர்ச்சைகளுக்கு வாய்ப்பே இல்லை!''
''இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தீர்கள்?'' 
''1993-ம் ஆண்டு நான் பி.ஹெச்டி. ஆய்வில் ஈடுபட்டு இருந்தபோது, கிளின்டன் அமெரிக்க அதிபர். அப்போது வெள்ளை மாளிகைக்கு நாள் ஒன்றுக்கு 5,000 இமெயில்கள் வந்து குவியும். அதை நிர்வகிக்கும் வேலை சிக்கலானதாக இருந்தது. ஆகவே, அந்த மெயில்களை வகைவாரியாகப் பகுத்துப் பிரிக்கும் தானியங்கித் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது வெள்ளை மாளிகை. 147 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் நான் கண்டறிந்த 'எக்கோ மெயில்’ (Echo Mail) என்ற தொழில்நுட்பம் வெற்றிபெற்றது. பிறகு, இந்த 'எக்கோ மெயிலை’ ஒரு நிறுவனமாகத் தொடங்கினேன். இன்று 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த நிறுவனம், உலகின் மிக முக்கியமான நிறுவனங்களைத் தனது வாடிக்கையாளர்களாகக்கொண்டு இருக்கிறது. அதுபோக, வேறு சில நிறுவனங்களையும் நடத்துகிறேன். கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் நஷ்டத்தில் இயங்கிய அமெரிக்கத் தபால் துறையில் எனது புதிய இமெயிலிங் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தியபோது, அது லாபகரமாக மாறியது. அப்போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பில் இருந்து தப்பினார்கள். அமெரிக்க ஊடகங்கள் என்னைக் கொண்டாடின. ஆனால், எனக்கு இந்தியாவில் பணிபுரியவே விருப்பம். அதே சமயம், அங்கு எனக்குக் கிடைத்தவையோ கசப்பான அனுபவங்களே...'' 
''என்ன நடந்தது இந்தியாவில்? நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டீர்கள் என்று அறிகிறேன்...'' 
''ஆம், உண்மைதான். 2007-ம் ஆண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான சி.எஸ்.ஐ.ஆர். (கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) துறையில் என்னைக் கூடுதல் செயலாளராக நியமித்தார் மன்மோகன் சிங். சில காலம் அங்கு இருந்தேன். அந்த சி.எஸ்.ஐ.ஆர். நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், 60 ஆண்டுகளில் அதில் உள்ளவர்கள் எதுவுமே செய்யவில்லை. எங்கும் லஞ்சம், ஊழல். அறிவியல் கண்டுபிடிப்புக்கான சூழலே அங்கு இல்லை. இதைப் பற்றி 'கண்டுபிடிப்புகளுக்குச் சுதந்திரம் வேண்டும்’ என்ற தலைப்பில் 47 பக்கத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதை உலகின் முக்கியமான 4,000 விஞ்ஞானிகளுக்கு மெயில் அனுப்பினேன். உலக அளவில் அது பெரிய விவாதமானது. உடனே, இந்தியாவின் சட்டத்தை நான் மீறிவிட்டதாகச் சொல்லி, திடீரென ஒரு நாள் என் வீடு முடக்கப்பட்டது. நான் நேபாளம், கத்தார் வழியே அமெரிக்கா வந்தேன். 'சிவா அய்யாதுரையை வெளியேற்றியது இந்தியா செய்த பெரிய தவறு’ என்று பல விஞ்ஞானிகள் எழுதினார்கள். அதைப் பற்றி இந்தியா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் அங்கு சூழல் மாறிவிடவில்லை. அங்கு இருக்கும் நேர்மையற்ற அரசியல் சூழலில் அறிவியல் ஒருபோதும் வளராது!''
''உங்கள் பேச்சை வைத்துக் கேட்கிறேன்... நீங்கள் சயின்டிஸ்ட்டா, கம்யூனிஸ்ட்டா?'' 
''எம்.ஐ.டி-யில் படிக்கும்போது மாணவர் சங்கத்தில் இணைந்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். இலங்கையில் நம் தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டு இருந்த சமயத்தில், அப்போது இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவை எதிர்த்து இங்கு போராடியது உட்பட. 'த ஸ்டூடன்ட்’ என்ற பெயரில் நான்கு ஆண்டுகள் பத்திரிகை நடத்தினேன். அதனால், நான் அடிப்படையில் கம்யூனிஸ்ட். பிறகுதான் சயின்டிஸ்ட். இன்று தொழில்நுட்பத்தையும் அறிவியல் வளர்ச்சியையும் பெரும் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற இணைய நிறுவனங்களும் செல்போன் கம்பெனிகளும் மக்களை அன்றாடம் கண்காணிக்கின்றன. சந்தர்ப்பம் வரும்போது மக்களுக்கு எதிராகக் கைகோத்துக்கொள்கின்றன. சமீபத்தில், எகிப்தில் நடந்த மக்கள் புரட்சியை, எஸ்.எம்.எஸ். அனுப்புவதைத் தடைசெய்து ஒடுக்க முயன்றதே இதற்குச் சிறந்த உதாரணம்!''
''உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?'' 
''எனது முழு வாழ்க்கையும் அறிவியலில்தான் செலவாகும். அதில் சந்தேகம் இல்லை. அமெரிக்காவிலும் இந்தியாவிலுமாக மாறி மாறி இயங்கவே விரும்புகிறேன். இந்திய சித்த மருத்துவத்தின் மேன்மைகளை ஆராய்ச்சி செய்து, அதைக் கிழக்குலகின் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைத்து, மருத்துவத் துறையில் புதிய புரட்சியை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு. இன்றைய கார்ப்பரேட் உலகம், தொழில்நுட்பங்களையும், அறிவியலை யும், அறிவையும் மேலும் மேலும் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிறது. அது எல்லோ ருக்கும் கைவராத கலை என்பதைப் போலச் சித்திரிக்கிறது. ஆனால், அப்படி அல்ல. உலகத்தில் ஆயிரமாயிரம் சாம்ஸ்கிகள், சிவாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியே கொண்டுவர வேண்டும். நான் அடிக்கடி சொல்லும் வாசகத்தையே இங்கும் சொல்கிறேன்: புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் நிகழ்த்த முடியும்!''

அரசியலில் ஒரு மனிதன்!-இந்தர் குமார் குஜ்ரால்


http://www.vikatan.com/jv/2012/12/zmziyt/images/p35.jpg
ந்தர் குமார் குஜ்ரால் இறந்துபோனது, இன்றைய இந்தியாவுக்கு தலைப்புச் செய்தியாகக்கூட இடம்பெறவில்லை. இதுவரை இருந்த பிரதமர்களில் அவரும் ஒருவர் என்ற பட்டியலில் க்விஸ் கேள்விகளில் மட்டும்தான் இடம் பிடித்தார். ஆனால், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள எத்தகைய கீழான காரியத்தையும் செய்யலாம் என்பதே விதியாகிவிட்ட இன்றைய அரசியல் உலகத்துக்கு, இந்தர் குமார் குஜ்ரால் போன்ற ஒருவரின் மறைவு... மாபெரும் ஏக்கப் பெருமூச்சைக் கிளப்புகிறது.

குஜ்ரால் என்பது அவரது பெயர் அல்ல. அவர் பிறந்த கிராமத்தின் பெயர். அது இந்தியாவில் இல்லை. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கிறது. ஆனால் குஜ்ரால், அப்பழுக்கற்ற இந்தியனாகவே இருந்தார். அவரது பூர்வீகம், காங்கிரஸ் கட்சி அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தவர். ஆனால், 35 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சிக்காகவே வாழ்ந்தவர்.
நல்லவர், நாணயஸ்தர் என்பதற்காக, அவருக்குப் பதவிகளைக் கொடுத்தனர். அதைத் தக்க​வைத்துக் ​கொள்வதற்காக யாரோடும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை அவர். அப்படி செய்திருந்​தால், இந்திரா காந்திக்கு அடுத்த இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டு, காங்கிரஸிலேயே தொடர்ந்து இருக்கலாம். காங்கிரஸ் கட்சி ஒரு தலையாட்டிப் பிரதமரைத் தேடிக்கொண்டு இருந்த 1997-ல், குஜ்ரால் பதவியைப் பிடித்தார். ஆனால், அவர் தலையாட்டிப் பிரதமராக செயல்பட்டு இருந்தால், 11 மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தவர் என்ற நிலை வந்திருக்காது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் பூசாரியாக இருக்கச் சம்மதிக்காமல், ராஜினாமா செய்தவர் குஜ்ரால். அவரது மரணம் இந்தக் குணாம்சத்தின் வெற்றிடத்தையே நினைவுபடுத்துகின்றன.
பிரதமர் இந்திராவுக்கு மிகப்பெரிய களங்கம் 1975-ம் ஆண்டு காலத்து அவசரநிலைப் பிரகடனம். இந்திராவுக்கு எதிராக யாரும் எதுவும் எழுதக் கூடாது என்று பத்திரிகைகள் அனைத்தும் மௌனிக்கச் செய்யப்பட்டன. இந்த நேரத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் இந்தர் குமார் குஜ்ரால். மேலோட்டமாகப் பார்த்தால் இத்தனை காரியங்களையும் அவர்தான் செய்தார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே, இந்திராவுக்குப் பக்கத்தில் இருந்தபடியே எமர்ஜென்சி நடவடிக்கை​களுக்கு எதிராகச் சண்டை போட்டவர் குஜ்ரால். அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர் என்று பெயர் எடுத்த குஜ்ரால், அன்றைய 'கிரேட் டிக்டேட்டர்’ சஞ்சய் காந்தியை எதிர்த்து சரிக்குச் சரி நின்றார். எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள், குஜ்ராலை வீட்டுக்கு வரச்சொன்னார் சஞ்சய். 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததாகச் சொல்லி அவர் கோபப்பட, 'நீங்கள் என் மகன் வயது. நான் உங்கள் அம்மாவுடன் அரசியல் நடத்துபவன். உங்கள் அப்பாவின் நண்பராக இருந்தவன். மரியாதையாக நடத்துங்கள்’ என்று சொல்லி விட்டு வந்தார். அந்தக் காலகட்டத்தில் வெளியாகும் செய்தி புல்லட்டின்​களை சஞ்சய் காந்திக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு துறையின் அமைச்சர் சொன்ன​போது, மறுத்தார். அதன்பிறகு, பிரதமர் இந்திராவுடன் நேரடி மோதல் ஏற்பட்டது. அவர் சொன்னதை ஏற்க குஜ்ரால் மறுக்கவே, 'நீங்கள் விலகி விடுங்கள். எனக்கு வேண்டிய​வரை வைத்து இந்தத் துறையைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று இந்திரா இவரைத் திருப்பி அனுப்பினார். வேறு துறைக்குத்தான் அவரை மாற்ற முதலில் இந்திரா நினைத்தார். பிறகு ரஷ்யத் தூதராக... கிட்டத்தட்ட மாஸ்கோவுக்கு நாடு கடத்தினார்.
அன்று அமைதியாக இருந்திருந்தால், இன்று மன்மோகன் சிங் இடத்தை நிரப்பி இருக்கலாம். இந்தப் பஞ்சாபிக்கு பதிலாக அந்தப் பஞ்சாபி இருந்திருக்​க​லாம். ஆனால், குஜ்ராலுக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. எமர்ஜென்சியை எதிர்த்துக் கிளம்பிய ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். 96-க்குப் பிறகு ஏற்பட்ட தொங்கு நாடாளுமன்றத்தில் குஜ்ராலும் 11 மாதங்கள் பிரதமர் ஆகும் பாக்கியம் கிடைத்தது.
ஒரு பக்கம் சீதாராம் கேசரி தலைமையிலான காங்கிரஸ், இன்னொரு பக்கம் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தலைமை​யிலான இடதுசாரிகள், முலாயம், லல்லுபோன்ற இந்தி மாநிலத் தலைவர்கள், கருணாநிதியும் மூப்பனாரும் சந்திரபாபு நாயுடுவுமான தென்னகத் தலைவர்கள்... என, ஏக இந்தியாவும் சேர்ந்து குஜ்ராலை பிரதமராக முன்மொழிந்தது. அந்த அளவுக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவராக இருந்தார். இதில் சிக்கலை உண்டாக்கியது ஜெயின் கமிஷன். ராஜீவ் கொலை வழக்கில் உள்ள சதிச் செயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட இந்தக் கமிஷன், தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, 'இந்தக் கொலையில் தி.மு.க-வுக்குத் தொடர்பு இருக்கிறது. விடுதலைப்புலிகளை தமிழர்கள் ஆதரித்ததால், அவர்களுக்கும் கொலையில் பங்கு இருக்​கிறது’ என்று பெரிய காமெடி நடத்தியது. சொந்த வாழ்க்கையில் எந்தச் சாதனையும் செய்ய முடியாத சீதாராம் கேசரிக்கு, இந்த அறிக்கை கிடைத்தது. 'தி.மு.க-வை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்’ என்று குஜ்ராலைக் கட்டாயப்படுத்தினார். 'இதைவிடப் பெரிய அபத்தம் எதுவும் இருக்க முடியாது’ என்றார் குஜ்ரால். 'அப்படியானால் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் வாங்கும்’ என்றார் கேசரி. 'நீங்கள் என்ன வாபஸ் வாங்குவது... நானே ராஜினாமா செய்கிறேன்’ என்று கும்பிடு போட்டார் குஜ்ரால். தன் மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு நாற்காலி​யைத் தொட மாட்டேன் என்று வாழ்ந்த குஜ்ராலின் மறைவு, ஈடு செய்ய இயலாத இழப்பு.
பிரதமர்களின் வரிசையில் அல்ல... மகத்தான மனிதர்​களின் வரிசையில் இந்தர் குமார் குஜ்ரால் இடம் பிடித்து விட்டார்!

நன்றி : விகடன் 

Wednesday, January 9, 2013

மரணத்திற்குப் பின் என்ன?

 மரணத்திற்குப் பின் என்ன?

1944ல் உலகப் புகழ் பெற்ற மனவியல் நிபுணர் கார்ல் ஜங் (Carl Jung) சுவிட்சர்லாந்து மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட சிறிது நேர மரண அனுபவத்தை விரிவாக தன் சுய சரிதத்தில் எழுதியுள்ளார். அவரது அனுபவமும் பிற்கால ஆராய்ச்சியாளர்கள் தொகுத்த அனுபவங்களோடு ஒருசிலவற்றில் ஒத்துப் போகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியையே சில மைல்கள் தொலைவில் கண்டதாகக் கூறி அண்டசராசரத்தில் பார்த்த அந்த வியத்தகு காட்சி எப்படி இருந்தது என்றும் எழுதியுள்ளார். அதற்குப் பின் பற்பல ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்று மனிதன் பார்த்த காட்சியும், கார்ல் ஜங்க் கண்ட காட்சியும் ஒத்துப் போனது தான் பெரிய ஆச்சரியம்.

இது போன்ற நிகழ்வுகள் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களையும் கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் இது போன்ற அனுபவங்கள் கற்பனையா இல்லை நிஜமா என்று அறிய விரும்பினார்கள். அதை ஆராய முற்பட்டார்கள். அதற்கு மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மரணத்திற்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு முழுவதுமாய் விரிவான விடை கிடைக்கா விட்டாலும் மரணத்திற்குப் பின் உடனடியாகச் சில நிமிடங்கள் என்ன நடக்கின்றன என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டு பிடித்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சிகள் தனிப்பட்ட அளவில் அங்கொன்றும், இங்கொன்றும் நடந்து கொண்டிருந்தாலும் மிகவும் பிரபலமானதும், மேலும் அதிக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்ததும் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) என்பவர் 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான். மரணத்தின் விளிம்பு வரை வந்து சில வினாடிகள் முதல் ஓரிரு நிமிடங்கள் வரை இதயத்துடிப்பும், மூச்சும் நின்று போய் பின் மறு உயிர் பெற்ற மனிதர்களை மருத்துவமனைகளின் ஆவணங்கள் மூலம் கண்டறிந்து பேட்டி எடுத்து அவற்றை மீண்டும் சிகிச்சை செய்த மருத்துவர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ரேமண்ட் மூடி ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். மரணத்தை எட்டிப்பார்த்த 150 நபர்களை வைத்து பல ஆண்டுகள் தொடர்ச்சியாகச் செய்த ஆராய்ச்சிகளை தன் புத்தகத்தில் விரிவாக ரேமண்ட் மூடி எழுதியிருக்கிறார். மரண விளிம்பு அனுபவம் (NDE-Near Death Experience) என்ற சொற்றொடரை முதலில் உபயோகப்படுத்தியது ரேமண்ட் மூடி தான். அந்த தொடரே இன்று வரை இது குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அவர் ஆராய்ச்சி செய்த அந்த 150 பேருமே பல தரப்பட்ட மனிதர்கள். ஆனால் அவர்கள் சொன்ன அனுபவங்களில் சில அனுபவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்கள் சந்தித்த அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தன் நூலில் வியப்புடன் கூறுகிறார். அவை என்ன தெரியுமா?

மரண விளிம்பில் 9 அனுபவங்கள்


ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்-
ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இது இன்னமும் நமக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம்
-
கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும் –
மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம் –
பலரும் கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள். இது ப்ளேடோவின் சிப்பாய் கண்ட அனுபவமாகவும் இருக்கிறது.

5) பூமியைப் பார்த்தல் –
சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது.

6) ஒளி மனிதர்களைக் காணுதல் –
சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்-
ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள். சிலர் யேசுகிறிஸ்து என்றும், தேவதை என்றும், பொதுவாக கடவுள் என்றும் சொன்னார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஒளிபடைத்த அபூர்வ சக்தி படைத்த ஒருவரைப் பார்த்ததாகவே கூறினார்கள்.

மேலும் நன்றாக விசாரித்ததில் அந்த பேரொளி விஷயத்தில் அனைவருமே ஒத்துப் போனார்கள். அந்தப் பேரொளியை அவர்களாக அவரவர் கடவுளாக எண்ணிக் கொண்டனர் என்ற முடிவுக்கு ரேமண்ட் மூடி வந்தார். ஆனால் பேரொளி மாத்திரமா என்று கடவுள் நம்பிக்கையோ, மத ஈடுபாடோ இல்லாதவர்களிடம் கூடக் கேட்ட போது அவர்களும் வெறும் பேரொளி மட்டும் அல்ல என்றும் அதற்கு மீறிய தங்களிடம் பேசவல்ல ஒரு சக்தியாக அது இருந்தது என்றும் தெரிவித்தார்கள்.

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல் –

அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள். கிட்டத்தட்ட கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திரகுப்தன் கணக்கு படித்தல் போல் இது இருப்பதாகத் தோன்றுகிறதல்லவா?

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவிக்கப்படல் –
அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார். அவருடைய ஆராய்ச்சிகளில் சிலர் அருகில் நடந்த சம்பவங்கள் மட்டுமன்றி மிகத் தொலைவில் நடந்த அவர்களுக்கு மிக நெருக்கமான நபர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் பார்த்தார்கள், கேட்டார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இது மனிதர்களுடைய அறிந்துணரும் திறன் அவர்கள் உடல்களுக்கு அப்பாற்பட்டதற்கான அசைக்க முடியாத ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.
அவர்களில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

இந்த அனுபவங்களின் ஆராய்ச்சிகள் புலன்வழியல்லாமலேயே மனிதர்களால் உடலை விட்டு நீங்கும் போது பார்க்க, பேச, கேட்க, உணர முடிகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எல்லாராலும் அப்படி உடலை விட்டுப் பிரிகிற போது அடைய முடிகிற இந்த அபூர்வ சக்தி மனித உடலில் உள்ள போதே சித்தர்கள், யோகிகள், அபூர்வ சக்தியாளர்கள் ஆகியோரால் அடைய முடிகிறது. ஏனென்றால் அவை மனிதனுக்கு இயல்பாகவே அறிய முடிகிற சக்திகள். உடலுக்குள் புகுந்த பின் ஐம்புலன்கள் வழியாகவே அறிய ஆரம்பித்து இந்த இயல்பான அபூர்வ சக்திகளை உபயோகிக்காததால் அவன் இழந்து விடுகிறான். முறையாக முயற்சித்தால், பயிற்சி செய்தால் இழந்ததை அவன் மறுபடி பெற முடிவதில் வியப்பென்ன இருக்கிறது?

சிந்தித்துப் பாருங்களேன்.

மாயதுறவி ரஸ்புடின்

 
ஷ்யாவின் வரலாற்றில் மறக்க முடியாத பெயர் கிரிகோரி எபீமொவிச் ரஸ்புடின் சைபீரியாவின் மேற்கு பகுதி ஒன்றின் சிறுவிவாசாயி எபீமொவிச்சிர்க்கும் அண்ணாவிற்கும் 1872  ஆம் ஆண்டு பிறந்தவர்  ரஸ்புடின் அன்றைய சைபீரியாவில் படிப்பறிவு பெற்றவர்கள் மிக சொற்பமே ஆனால் ரஸ்புடின் தந்தை கொஞ்சம் கல்வியறிவு பெற்றவர் ஆதாலால் இரவு நேரங்களில் தனது குடும்பத்தினருடன் பைபிளினை படிப்பதில் செலவிட்டார். இதன் தாக்கமே ரஸ்புடினை பிற்காலத்தில் புனித மனிதனாகவும் ,ஜார் அரசவையில் கோலோச்சவும் உதவியது.

இளம் வயது முதலாகவே ரஸ்புடினுக்கு அதிசய சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனது எட்டாம் வயதில் மூத்த சகோதரனை கபவாதத்தில் இழந்த துயரம் வெகுவாக ரஸ்புடினை தாக்குகிறது  ஆனாலும் அவனுடைய அசாத்திய சக்திகள் மங்கவில்லை, ஒரு சமயம் ரஸ்புடினின் தந்தையும் அவர் நண்பர்களும் கிராமத்தில் நடந்த குதிரை திருட்டு குறித்து விவாதித்த போது  தன்  படுக்கையில் இருந்து துள்ளி எழுந்த ரஸ்புடின் குறிப்பிட மனிதரை சுட்டி இவர்தான் குதிரயை  திருடியது என கூறியபோது அவனது கூற்றினை ஏற்க்க மறுத்துவிட்டனர்.பிறகு ரஸ்புடின் உறவினர்கள் இருவர் ரஸ்புடின் சுட்டிய மனிதனை ரகசியமாக கண்காணித்தபோது அவரே குற்றவாளி என அறிந்து வியந்தனர்.
ரஸ்புடின் அவனது கிராமத்தில் தனித்தவிதமாகவே வளர்ந்தான், கட்டுபாடற்ற வாழ்க்கை முறையினை மேற்கொண்டான். மிக இளம்வயதிலேயே அளவுக்கு மிஞ்சி மது அருந்தும் வழக்கம் கொண்டிருந்த ரஸ்புடின் தன வாழ்க்கையில் எத்தனை தூரம் செல்லமுடியுமோ அத்தனை தூரம் சென்றவன், மேலும் ரஸ்புடினின் மீது கிராமத்து பெண்களுக்கு இனம் புரியாத கவர்ச்சி இருந்தது. பெண்கள் மீது அதிக ஆசை கொண்டதன் விளைவாகவே தன் பத்தொன்பதாம்  வயதில் பிரஸ்கோவையா துப்ரோவினா என்ற 23  வயது பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.
திருமணத்திற்கு பிறகும் ரஸ்புடினின் நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை வழக்கம்போலவே குடியும் கூடவே அடாத செயலும் செய்தவாறே வாழ்ந்து கொண்டிருந்த பொது அவரது வாழ்வில் திருப்புமுனையாக அவரும் அவர் நண்பர்களும் ஒரு குதிரை  திருடிய வழக்கில் குற்றம் சாட்டபடுகின்றனர் , ரஸ்புடினுக்கு தண்டனை தரப்படவில்லை எனினும் அவரை கிராமத்தை விட்டு வெளியேறும்படியான நிலைக்கு உட்படுத்தபடுகிறார் அவ்வாறு இல்லையெனில் அவரது தந்தை 260  மைலுக்கு அப்பால் உள்ள துரவிக்கல் மடத்திற்கு யாத்திரை செல்லவேண்டுமென கூறும்போது ரஸ்புடின் தானே இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறுகிறார் அப்போதைய சூழலில் அந்த பயணம் குறைந்த தண்டனை என நினைத்த ரஸ்புடினுக்கு அந்த பயணத்தின் மூலம் தன் வாழ்வின் திசை  மாறபோவதை புகழ்பெற போவதை அறியவில்லை.

ரஸ்புடினுக்கு தான் மேற்கொள்ள இருக்கும் பயணம் தன வாழ்வின் பாதையை மாற்றப்போவது அறியாமல் பயணப்படுகிறார். வேர்க்ஹோடுரி(verkhoturie ) பயணத்தில் அங்கே ரஸ்புடினுக்கு இரண்டு மிக முக்கிய சந்திப்புகள் நிகழ்கின்றன.

ஒன்று ரஷ்யாவின் புகழ்பெற்ற துறவி மகரி (makary)தனது பயணத்தின் துவக்கத்தில் முதல் மகனை இழந்த ரஸ்புடினுக்கு   மகரி" இது ஒரு வகையில் கடவுளின் முன் அறிவிப்பாக  எடுத்து கொண்டு மீண்டும் கிராமத்திற்கு செல்லும்போது மனிதாக புனிதனாக செல் " இதனை பின்பற்றும் ரஸ்புடின் மீண்டும் தனது கிராமத்திற்கு திரும்பி மது மற்றும் இறைச்சி உண்பது போன்ற வழக்கங்களை கைவிட்டு தவறாமல் பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார், ரஸ்புடினின்  இந்த செய்கை மாற்றங்கள் அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் அளிப்பதாக உள்ளது.

அதே சமயம் ரஸ்புடின் சந்தித்த இன்னுமொரு மிக வினோதமான ரஷிய மத குழு ஸ்கொப்ட்சி (skoptsy ) இவர்களின் கொள்கை பாவத்தை செய்வதன் மூலமும் அதற்க்கான மன்னிப்பை கோருவதன் மூலமும் இறைவனை அடையலாம், மிக எளிதாக கூறுவதென்றால் கடவுளை அடைய வேண்டுமெனில் கண்டிப்பாக பாவங்கள் செய்ய வேண்டும் எனபது இவைகளின் வினோத கொள்கை.இந்த மத கொள்கைகள் ரஸ்புடினுக்கு மிக சரியாக பொருந்தி வந்தது.

தனது தற்பொழுதைய வாழ்வினை சீர்திருத்தம் செய்திருந்தாலும் முந்தைய வாழ்வு முழுவதும் பாவங்களை மட்டுமே செய்த ரஸ்புடின் இந்த வினோத மத கொள்கை படி மத குருவாக புதிய தோற்றம் கொண்ட ரஸ்புடின் வழக்கம் போலவே தனது பாவங்களை செய்தவாறே மத குருவாக மதம் குறித்து போதிக்க பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

1902 - ஆம் ஆண்டு மத குருமார்கள் ரஸ்புடினை செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர், ரஸ்புடின் மேலும் பல செல்வந்தர்களையும் உயர்குடும்பத்தினரையும் வசப்படுத்த செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் செல்ல முடிவெடுத்தார், மேலும் ரஸ்புடின் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் வரும் முன்னரே அவரை பற்றிய செய்திகள் அங்கே மக்களிடையே புழங்கி வந்தது.ரஸ்புடினின் நோய் குணபடுத்தும் பிரார்த்தனை மந்திரம் கிறித்துவ மற்றும் பாகன் சமயத்தில் இருந்த அசாத்திய மற்றும் மயக்கும் பேச்சுத்திறனை மேலும் வளர்த்து கொண்டார் இந்த திறமைகளை சாவியாக பயன்படுத்தியே அரச குடும்பத்தில் மிக உயர்ந்த செல்வாக்கினை பெற்றார்.

1903 -இல் செயின்ட்  பீட்டர்ஸ் பேர்க் வரும் ரஸ்புடின் தன் பேச்சாலும் போதைனையாலும் உயர்தர வகுப்பு மக்களை கவர்ந்ததன் மூலம் ரஸ்புடினுக்கு சீடர் குழாம் மேலும் விரிவடைகிறது , தன்னை ஒரு ஆன்மீக ஞானியாக குறிப்பிட்டு கொண்ட  ரஸ்புடின் " கடும் தவத்திலும் தனிமையிலும் வாழும் கடவுளின் நாயகனாகிய தனக்கு உதவுவது மூலம் குழப்பத்திலும் துன்பத்திலும் உழலும் ஆன்மாக்களுக்கு உதவுமாறு "விவரித்து கொள்கிறார்.

ரஸ்புடினின் அமானுஷ்ய சக்திகளை குறித்து மக்களிடையே பேச்சும் நம்பிக்கையும் பல உயர்தர மக்களை இணைக்க போதுமானதாக இருந்தது,உயர் வகுப்பு மக்களுக்கு இந்த கடவுளின் நாயகன் சர்ச்சில் இருப்பது அவசியமானதானது,   ஆனாலும்  ரஸ்புடினை விரும்பாத சிலர் அவர்  மதத்தை முகமூடியாக கொண்டு அதன் மூலம் மது பெண்கள் சுகம் மற்றும் பணத்தை தேடுவதாக குற்றம் சாட்டினர்.

1905 -ஆம் ஆண்டு மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் விஜயம் செய்யும்   ரஸ்புடின் தனது ஆரம்ப கால நண்பருடன் தங்கி இருக்கும் போது
ரஷ்யாவின் பிரபு குடும்பத்தினரான  பீட்டர் நிக்கொலோவிச் மற்றும் மிளிட்சா ,சந்திக்கிறார் .  இறைவனின் அற்புதாமான அருளை பெற்ற அதே சமயம் மிகவும் வறுமையில் இருக்கும் ஒரு துறவியை சந்திபதான ஏற்பாடாக அது இருந்தது அந்த தருணத்தில் ரஸ்புடின் தனது வழக்கமான நோயினை குணப்படுத்தும் அற்புதத்தை நிகழ்த்துகிறார், பிரபுவின் குடும்பத்தினருக்கு இல்லை அவர்களின் செல்ல நாய்க்கு, மருத்துவர்களால் இரண்டு மாதம் மட்டுமே வாழும் என கூறப்பட்ட நாயின் அருகில் அமர்ந்து ஏறத்தாழ அரை மணி நேர பிரார்த்தனை செய்து ரஸ்புடின் எழும்போது நாய் கண்ணால் கண்டு உணரும் அளவு உடல் நிலை தேறி இருந்தது இந்த நிகழ்வுக்கு பின் அதே நாய் ஏறத்தாழ ஒரு வருடம் உயிர் வாழ்ந்தது



ராணிஅலெக்சாண்ட்ரிய  


 மருத்துவர் பிலிப் என்பவருடன் ஜார் அரசி அலெக்சாண்ட்ரியா உடன்  நாடு மற்றும் கடவுள் போன்றவற்றை குறித்து விவாதிப்பது வழக்கம் அச்சமயம் மருத்துவர் பிலிப் கடவுள் குறித்து விவாதத்தின் பொது ரஸ்புடின் குறித்து கூறுகிறார்.
ரஷிய அரசர் மற்றும் அரசி ரஸ்புடினை 1905 -1906  இந்த வருடங்களில் சொற்ப அளவிலேயே சந்தித்து உள்ளனர், அந்த சந்திப்பின் போது ரஸ்புடின் தனது அமானுஷ்ய சக்திகளை உபயோகபடுத்தாமல் இயல்பான முறையில் அவர்களை எதிர்கொண்டுள்ளார்,
இளவரசர் அலெக்சி
ஜார் மன்னருக்கும் ஒரு முக்கியாமான பிரச்சினை இருந்தது 1904  இல் ரஷிய ஜப்பானிய போர் ஆரம்பித்தது அதே வேலை 1905  ரஷிய மன்னருக்கு ஆண் வாரியான அலெக்சி பிறந்தார், ரஷிய அரச குடும்பத்தின் வாரிசான அலெக்சி பிறப்பு மன்னரை மட்டுமின்றி மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஆனால் அலேக்சிக்கு தன பாட்டிவழி நோயான   ஹீமோபீலியாவை கொண்டிருந்தார்
ஹீமோபீலியா என்பது காயம் ஏற்பட்டால் ரத்தம் வெளிவந்து உறையாமல் தொடர்ந்து வெளியேறும் ஒரு வகை மரபு நோய், மிகவும் நோய் வாய்ப்பட்ட முறையில் இருந்த அலேக்சியை கவனித்து கொள்ளவும் பாதுகாக்கவும் தனி பாதுகாவலர் நியமிக்க பட்டார் இந்த செய்தி மக்களுக்கு தெரியாத வண்ணம் அரசரும் அரசியும் பார்த்து கொண்டனர் அதே சமயம் அலேக்சியின் நோயின் காரணமாக அவரால் இயல்பான வாழ்வை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

அரசியின் ஆலோசகரான பிலிப் ஏற்க்கனவே ரஸ்புடின் குறித்து புகழ்ந்து பேசியதை கேட்ட அரசி ரஸ்புடினை தனது மற்றும் தனது மகன் வாழ்வின் மிக முக்கியமானவராக கருதினார்.அதற்க்கேற்ப்ப பிலிப்பும் ரஸ்புடினை அரசியின் வாழ்வில் ஏற்பட்டா துயர்களை களையும் வண்ணம் அவரிடம் அனுப்புகிறார்.

ரஸ்புடின் அரச குடும்பத்தின் வாரிசை தனது நோய் தீர்க்கும் ஆற்றல் மூலம் ஹீமோபீலியா நோயில் பிடியில் இருந்து விடுவிக்கிறார், இந்த நிகழ்வே அவரை அரச குடும்பத்தில் மிக முக்கிய இடம் பெற காரணமாயிற்று, 
ரஷிய அரச குடும்பம்

இந்த நிகழ்வினை குறித்து அலேக்சியின் மூத்த சகோதரி தனதுகுறிப்புகளில் இவ்வாறு எழுதி உள்ளார் :
"அவனுடைய கண்களுக்கு கீழே கருவளையம் படர்ந்து இருந்தது மேலும் அவனது சிறிய உடலும்  நோயினால் சிதைக்கப்பட்டு இருந்தது,  அவனது கால்கள் வீக்கமாக இருந்தது,மருத்துவர்கள் செய்வதறியாது தங்களுக்கு பேசிக்கொண்டு இருந்தனர்,என்னை அறைக்கு செல்லுமாறு வற்ப்புருத்தபட்டேன்,அலிக்கி(alicky )செயின்ட் பீட்டர்ஸ் பெர்கில் இருந்த ரஸ்புடினுக்கு இந்த செய்தியை அனுப்பினார்.அநேகமாக நள்ளிரவு அல்லது அதற்க்கு அதற்க்கு பிறகே ரஸ்புடின் அரசமாளிகைக்கு வந்ததாக தெரிகிறது, பிறகு விடியற்காலை அலிக்கி என்னை அலெக்சி அறைக்கு செல்லுமாறு கூறியதும் நான் அங்கு சென்ற பார்த்தபொழுது என் விழிகளை என்னால் நம்ப முடியவில்லை அலெக்சி தற்பொழுது நோயுடன் போராடவில்லை நலமுடன் காணபட்டான்,அவனது கண்கள் தற்பொழுது பிரகாசமாகவும் அவன் படுக்கையில் அமர்ந்தும் அதே சமயம் தனது பாதங்களை ஊன்றி எழுந்து நின்று பிரார்த்தனையும் கூட செய்தான் அவனிடம் நோயின் தாக்கம் இல்லாமல் இருந்தது,பிறகே அளிக்கியிடம் இருந்து அறிந்து கொண்டேன் ரஸ்புடின் அலேக்சியை தொடக்கூட இல்லை ஆனால் குணபடுத்தி  விட்டார்  "

அலேக்சியை குணப்படுத்திய இந்த நிகழ்வு ரஸ்புடினுக்கு   அரச குடும்பத்தினரிடையே மிக பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது ,
 
 
அலேக்சியின் உயிரை காத்த ரஸ்புடினை சார் மன்னரும் அரசியும் தங்களுடன் இருக்குமாறு வேண்டிகொண்டனர், இதுவரை சாதாரண விவசாயி போல பணிவுடன் தோற்றம் கொண்டு உலாவந்த ரஸ்புடின், மாளிகைக்கு வந்த பின் உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டார், கூடவே தன பெண் சீடர்களையும் அதிகரித்து கொண்டு அவர்களுடன் வலம் வந்தார். 

பலர் முன்னிலையில் பெண் சீடர்களுடன் சிற்றின்ப விளையாட்டுக்களில் ஈடுபட்ட ரஸ்புடின் அவர்களை ஒருவரை தேர்ந்தெடுத்து தனியே அழைத்து சென்று கூறுவது "நான் உன்னை அசுத்தபடுத்துவதாக நீ நினைக்கலாம் ஆனால் உண்மை என்னவெனில் நான் உன்னை புனிதபடுத்துகிறேன் என்பதே" ரஸ்புடின் சீடர்கள் இதனை புனிதமாக கருதினர்(the holy of hoiness)

ரஸ்புடின் தன் சீடர்களுடன்















இளவரசி ஒல்கா(olga )விஷயத்தில் ரஸ்புடின் அதிக இடம் எடுத்து கொள்வதாகவும் பின்னிரவு நேரங்களிலும் கூட ரஸ்புடினை அறையில் கண்டதாக ஒல்காவின் ஆசிரியை ரஷிய அரசி அலெக்சாண்ட்ரியாவிடம்   கூறியபோது அலெக்சாண்ட்ரிய ரஸ்புடினை பாதுகாக்கும் விதமாக பேசியதன் மூலம் அலெக்சாண்ட்ரிய மேல் இருந்த ரஸ்புடின் பிடியை அறிய முடிந்தது. 

1911 - ஆம் ஆண்டுகளில் ரஸ்புடின் மீதான குற்றாசாட்டுகள் பெருமளவில் வெளியே கசிய தொடங்கியது முதன் முதலில் ரஸ்புடினை சந்தித்த பிரபு நிக்கொலோவிச் மற்றும் அவர் மனைவி ரஸ்புடினை பற்றி இந்த காலகட்டத்தில் கூறியது "மீண்டும் ஒருபோதும் அந்த தீய சக்தியை சந்திக்க விரும்பவில்லை" என கூறினார் .

ரஷிய ஆர்த்தடக்ஸ் சர்ச்சே முதன் முதலில் ரஸ்புடின் மீதான அதிகாரபூர்வ குற்ற விசாரணையை துவங்கியது, அவர்களுக்கு கணக்கற்ற ஆதாரங்கள் கிடைத்தன பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம் போன்றவற்றை சேகரித்து அரசி அலெக்சாண்ட்ரியாவிடம்  சமர்பித்து ரஸ்புடின் குறித்தும் ரஸ்புடினை நம்ப வேண்டாம் எனவும் கேட்டு கொள்கின்றனர் அனால் அலெக்சாண்ட்ரியா இதனை எதையும் ஏற்க்க தயாராக இல்லை, அனைத்தையும் புறந்தள்ளினார், இந்த நிகழ்வுகள் மூலம் ரஸ்புடினுக்கும்   அரசிக்கும்  இடையே இருந்த உறவை தெளிவாக்கியது.
துறவி இலியோடர்
                                                                                                                                                 ரஸ்புடினின்  நண்பர் என குறிக்கப்படும் மற்றுமொரு துறவி இலியோடர்  (iliodar)  ரஸ்புடினின்   வரம்பு கடந்த செயல்களை அறிந்து அவரை இந்த பாதையை விட்டு விலகுமாறும் மேலும் ரஸ்புடின் ஒரு பெண் துறவியிடம் தவறாக நடந்து கொண்டதை அறிந்து வெகுண்டு அவரிடம் பெண்களை விட்டும் அரச குடும்பத்தை விட்டும் விலகி செல்லுமாறும்  சத்தியம் வாங்கியதாகவும் அதனை சரியாக ரஸ்புடின் நிறைவேற்ற வில்லை எனவும் கூறப்படுகிறது. 

ரஸ்புடின் குறித்த எந்த குற்றத்தையும் செவிமடுக்க ஜார்  அரசரும் அரசியும் தயாராக இல்லை காரணம் ரஸ்புடினை அவர்கள் துறவியாக நேசித்தனர். அரசி அலெக்சாண்ட்ரியா ரஸ்புடின் குறித்த குற்றசாட்டுகளுக்கு கூறிய பதில் "ரஸ்புடினை அவர்கள் வெறுக்க காரணம் நாங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதால்" என கூறினார்.
 
1915- முதலாம் உலகப்போரில் கிழக்கு முன்னணியில் இருக்கும் படையின் அதிகாரத்தை ஜார்  மன்னர் எடுத்து கொள்வதாக உத்தேசித்திருந்தார். வெளிப்படையாக இந்த முடிவின் பின்னணியில் இருந்தது ரஸ்புடின் என கூறப்படுகிறது. ஜார் மன்னரை அப்புறப்படுத்தி பிறகு ஜார் அரசியின் மூலம் ரசியாவை ஆளலாம் என்ற ஒரு எண்ணம் எனவும் அதக்கேற்றார் போலவே ஜார் அரசி ரசுபுடின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு செயலாற்றினார். ரஸ்புடின் அரசவையில் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒரு தனிமனிதாக விளங்கினார் எதிர்ப்பவர்களை காணமல் போகசெய்வும் விரும்புவர்களை உயர்த்தும் அளவுக்கு அரசு மற்றும் அரசவையில் அவர் செல்வாக்கு இருந்தது. 
உயர்ந்த ரஸ்புடினின்  செல்வாக்கு சிலருக்கு எரிச்சலை தந்தது, அதே சமயம் 
இளவரசர் யுசுபோவ்  
ரஸ் புடினின் பிடியில் இருக்கும் அரசியரையும் அரச குடும்பத்தையும் காப்பாற்ற சிலர் ரஸ்புடினை கொன்றொழிக்க திட்டமிட்டனர். அந்த நாளும் வந்தது. டிசெம்பர் மாதம் 16 தேதி 1916 ஆண்டு இளவரசர் யுசுபோவ் தனது இல்லத்தில் நடைபெறும் விருந்திற்கு ரஸ்புடினை அழைத்திருந்தார்.அது விருந்து போல தோற்றமிருந்தாலும் உண்மையில் அங்கே அனைவரும் காத்திருந்தது ரஸ்புடின் மரணத்தை காண. இளவரசர் யுசுபோவும் ஏனைய சதி ஆலோசகர்களும் ரஸ்புடினை கொள்வது ஒன்றே அனைத்திற்குமான தீர்வு என்றும் ரச்புடினுக்கு உணவில் விஷம் கலந்து கொடுப்பது என்றும் திட்டமிட்டு இருந்தனர். 

திட்டப்படியே விஷம் கலந்த கேக்குகளை இளவரசர் யுசுப்போவ் ரஸ்புடினுக்கு பரிமாறினார் ஆனால் அந்த விஷம் ரஸ்புடினை ஒன்றும் செய்யவில்லை, போதாக்குறைக்கு மீண்டும் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்தனர் விஷத்தின் பாதிப்புகள் எதுவும் தெரியவில்லை, ரஸ்புடினை விஷம் பாதிக்கவில்லை, நேரம் நேரம் செல்ல செல்ல எரிச்சலைடந்த யுசுபோவ் ரஸ்புடினை சுடுவதன் மூலம் கொள்ளலாம் என முடிவு செய்து ரச்புடினின் பின்புறத்தில் இருந்து சுடுகிறார். ரஸ்புடின் கீழே கிடக்கிறார் இளவரசர் யுசுபோவ் ரச்புடினின் பிணத்தருகே சென்று குனிந்து காணும் போது எவரும் எதிர்பாரா  சட்டென துள்ளி எழும் ரஸ்புடின் தன கால்களால் யுசுபோவை தாக்குகிறார்.சுதாரித்த யூசுபோவ் ரஸ்புடினிடமிருந்து தப்பி மாடிப்படிகளில் ஓடுகிறார் , அப்பொழுது ரஸ்புடினை நோக்கி நான்கு முறை யூசுபோவ் சுடுகிறார் இதில் இரண்டு குண்டுகள் தவறினாலும் இரண்டு தோளிலும் தலையிலும் காயமுண்டாக்குகிறது ரஸ்புடினால் எழ முடியவில்லை  எனினும் ரஸ்புடின் சாகவில்லை பற்களை கடித்து கொண்டு இருக்கிறார் , தனது குழுவினருடன் இணைந்து யூசுபோவ் ரத்தம் வருவரை கொடுராமான முறையில் தாக்கியும் ரஸ்புடின் இறக்கவில்லை, ரச்புடினி கை கால்களை கட்டி கனமான போர்வையில் சுற்றி அதிகாலை நேரத்தில் சதி ஆலோசகர்கள் அவரது உடலை ஆற்றில் வீசி சென்றுவிட்டனர்.ரஸ்புடின் வீடுதிரும்பாமை அவரது உறவினர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது மேலும் போயல்சாரின் விசாரணையில் டிசெம்பர் மாதம் 19  தேதி  நிவேதா ஆற்றின் உறை பணியில் ரஸ்புடின் உடல் கண்டெடுக்க படுகிறது. ரஸ்புடினி பிரேத பரிசோதனை தரும் ஆச்சர்ய மிக்க முடிவுகள் சில 

  • மதுவில் விஷம் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை 
  • மூன்று குண்டுகள் உடலில் கண்டெடுக்கப்பட்டது முதலாம் குண்டு வயிற்றுபகுதியையும் கல்லீரலும் தாக்கப்பட்டது, இரண்டாம் குண்டு சிறுநீரக பகுதியை தாக்கி இருந்தது, மூன்றாம் குண்டு மூளை பகுதியில் காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
  • அவரது நூரையிரல் பகுதியில் நீர் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.(இதன் மூலம் ரஸ்புடின் நீரில் மூழ்கியும் உயிருடன் இருந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர்)

 தீர்க்க தரிசன கடிதம் 

ரஸ்புடினின் கையெழுத்து கடிதம்
"Grigory Efimych Rasputin-Novyh from village Pokrovskoe". 

I write and I leave this letter in Petersburg. I have a presentiment that till January, First I will die. I want teach Russian People, to the daddy, Russian mum, children and Russian earth that needs to be undertaken. 

If I will be killed by the employed murderers, Russian peasants, my brothers to you, the Russian tsar, nobody to be afraid. Remain on a throne and reign. 

And you, the Russian tsar, do not worry about the children. They still hundreds years will correct Russia. If I will be killed by boyars and noblemen, and they will spill my blood their hands remain dirtied by my blood, and twenty five years they cannot wash the hands. 

They will leave Russia. Brothers will rise against brothers and will kill each other, and within twenty five years will not be in the nobility country. 

Russian earth the tsar when you will hear a sound of bells, informing to you about Grigory's death that know: if murder was made by your relatives any of your family, i.e. children and native will not live also two years. 

They will be killed by Russian people. I leave and I feel in myself Acceptable instructions to tell to the Russian tsar as he should live after my disappearance. You should think, all to consider and cautiously to operate. 

You should care of your rescue and tell your native that I have paid my life to them. 

I will be killed. I any more in the alive. Pray, pray. Be strong. 

இந்த கடிதத்தின் படியே சில முக்கிய தீர்க்க தரிசனங்கள் 
  • தான் ஜனவரி ௧ தேதி முன்னமே மரணிப்பேன் என்று கூறுகிறார் -அவரை டிசம்பர் மாதம் கொலை செய்தனர் 
  • ஒரு வேலை பிரபுக்கலாலோ அல்லது உயர் குடிகலாலோ கொல்லபட்டால் என கூறுகிறார்-அரச பிரபு குடும்பத்தை சேர்ந்தவர்கள் இருவர் இதில் அடக்கம்.
  • சகோதரர்களுக்குள் சண்டையிட்டு மடிவார்கள், ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வார்கள் வெறுப்பு மிகும்.  என எழுதி இருக்கிறார்- பொதுவுடைமை  புரட்ச்சியில் தங்களுக்குள்ளே சண்டையிட்டதும், லெனினுக்கு பின் வந்த ஸ்டாலின் இந்த ரத்தம் மற்றும் வெறுப்பை வளர்த்தது என சிலர் கூறுகிறார்கள்.
  • தனது  மரணத்திற்கு பின் அரச குடும்பமோ அல்லது வாரிசுகளோ இரண்டு வருடத்திற்குள் மரணமடைவார்கள் என எழுதி இருக்கிறார்-அரச குடும்பம் தூக்கிலிடப்பட்டது 1918. ஜூலை 16 ஆனால் ரஸ்புடின் கொற்றுபடி அனைவரும் இறக்கவில்லை ரஸ் புடின் கொலையில் சம்பந்த கொண்ட மூவர் நீண்ட நாட்கள் வாழ்ந்துள்ளனர்.
  •    கிருத்துவத்துக்கு எதிரானவர்கள் வருவார்கள் என எழுதி இருக்கிறார்- சிலர் இது லெனின் அல்லது ஸ்டாலின்  வருகையை குறிப்பிடுகிறது என கூறுவார்.
  • சர்ச்சுகளின் மதிப்பு குலைக்கப்படும் என எழுதி உள்ளார்-ஸ்டாலின் தனது ஆட்சி காலத்தில் சர்ச்சுகளை தானிய கிடங்குளாக உபயோகித்தார்  இதை பற்றிய முன் அறிவிப்பு என கூறுகின்றனர்.